மீண்டும் போலீஸ் வேடத்தில் அதர்வா

அதர்வா முரளி ஏற்கனவே ‘100’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அடுத்து இவர் மேலும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படம், இது. ரவீந்த்ர மாதவா டைரக்டு செய்கிறார்.

இவர் டைரக்டர்கள் சுசீந்திரன், பூபதி பாண்டியன் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக இருந்தவர். அனுஷ்கா நடித்த ‘பாகமதி’ படத்துக்கு வசனம் எழுதியவர். படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான ‘ஈட்டி’ படத்தில், அதர்வா கதாநாயகனாக நடித்து இருந்தார்.

படத்தை பற்றி டைரக்டர் ரவீந்த்ர மாதவா கூறியதாவது:- அதர்வா முரளி ஏற்கனவே ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தாலும், அந்த படத்தின் கதையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், இது. அதிரடி சண்டை காட்சிகளுக்கு அதர்வா முரளி அழகாக பொருந்துகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகியை தேடிக்கொண்டிருக்கிறோம். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கோடை விடுமுறை விருந்தாக படம் திரைக்கு வரும்.’’

Suresh

Recent Posts

புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

54 minutes ago

காந்தி கண்ணாடி : 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.

காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

6 hours ago

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

7 hours ago

மதராசி : 11 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

7 hours ago

முத்துவை நம்பாமல் போகும் விஜயா,மனோஜ் போட்ட திட்டம்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…

9 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

9 hours ago