போலீசாருக்கு 3 வேளை உணவு…. ஓய்வெடுக்க தனது 8 ஓட்டல்களை வழங்கிய பிரபல இயக்குனர்

கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்கள் பலர் உதவி வருகிறார்கள். இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார். அதேபோல் பிரபல வில்லன் நடிகர் சோனுசூட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை வழங்கினார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் பாதுகாக்கும் காவல்துறையினருக்கு பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவர் தனது 8 ஓட்டல்களை போலீசாருக்காக வழங்கியிருக்கிறார். இது குறித்த தகவலை மும்பை காவல்துறை அவர்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்திருக்கிறது.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது: “பாதுகாப்பு பணியில் இருக்கும் எங்களது காவலர்களுக்காக மும்பையில் உள்ள 8 ஓட்டல்களை வழங்கியிருக்கிறார் ரோஹித் ஷெட்டி. போலீசார் ஓய்வெடுக்க, குளிக்க மற்றும் அவர்களுக்கான ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். நல்லெண்ணத்துடன் எங்களுக்கு உதவிய அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Suresh

Recent Posts

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

3 hours ago

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ்.??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…

6 hours ago

ஸ்ருதிக்கு வந்த ஐடியா, பிரச்சனையில் சிக்கிய சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…

6 hours ago

சபரி மற்றும் பார்வதி இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

6 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, சுந்தரவள்ளி முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

9 hours ago

கனி கேட்ட கேள்வி, பார்வதி சொன்ன பதில், வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

9 hours ago