rk selvamani
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு சென்னை பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு 15 ஏக்கர் நிலத்தில் ஸ்டுடியோ மற்றும் படப்பிடிப்பு தளங்கள் கட்டவும் 50 ஏக்கர் நிலத்தில் 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்டவும் இடம் வழங்கி உள்ளது. அதில் ஏற்கனவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது அம்மா படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டு வருகிறது.
அடுத்து 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும். 500, 800, 1,500, 2 ஆயிரம் சதுர அடி என்று 4 வகை குடியிருப்பு பகுதிகளாக இவை கட்டப்படும். இதில் குடியிருப்புகள் வேண்டி இயக்குனர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 3 ஆயிரத்து 750 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சினிமாவும் பையனூருக்கு மாறி விடும்.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…