rk selvamani
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு சென்னை பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு 15 ஏக்கர் நிலத்தில் ஸ்டுடியோ மற்றும் படப்பிடிப்பு தளங்கள் கட்டவும் 50 ஏக்கர் நிலத்தில் 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்டவும் இடம் வழங்கி உள்ளது. அதில் ஏற்கனவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது அம்மா படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டு வருகிறது.
அடுத்து 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும். 500, 800, 1,500, 2 ஆயிரம் சதுர அடி என்று 4 வகை குடியிருப்பு பகுதிகளாக இவை கட்டப்படும். இதில் குடியிருப்புகள் வேண்டி இயக்குனர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 3 ஆயிரத்து 750 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சினிமாவும் பையனூருக்கு மாறி விடும்.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…