சினிமா துறையில் துரோகம் நடிகை தனுஸ்ரீ தத்தா வருத்தம்

தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ஹார்ன் ஓகே ப்ளஸ் படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ தத்தா மீ டூ வில் புகார் கூறினார். நானா படேகரின் ஆட்கள் தன்னை தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. நானா படேகர் தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினியின் காலா படங்களில் நடித்துள்ளார். போலீசார் விசாரித்து நானா படேகருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்று வழக்கை முடித்தனர். இதனால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நானா படேகரும், தனுஸ்ரீ தத்தா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறும்போது, “இந்தி சினிமா உலகம் எனக்கு துரோகம் செய்து விட்டது. நான் நீதி கிடைக்க போராடினேன். ஆனால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. இது அராஜகம் ஆகும். இந்த பிரச்சினையில் இந்தி பட உலகினர் எனக்கு உதவவில்லை. நீதி கிடைப்பதற்கு பதிலாக என்மீது வழக்குகள் தொடரப்பட்டன. எல்லோரும் என்னை கைவிட்டு விட்டனர். நிச்சயமாக இதை மறக்க மாட்டேன். இந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வருவேன்” என்று கூறியுள்ளார்.

Suresh

Recent Posts

மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள்..!

மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

13 hours ago

ரோபோ ஷங்கர் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்.!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…

20 hours ago

ரோபோ ஷங்கர் உடல் பாதிப்படைய காரணம் என்ன தெரியுமா? பிரபல நடிகர் சொன்ன விஷயம்.!!

ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…

21 hours ago

கிருஷ் பாட்டி சொன்ன வார்த்தை, முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

21 hours ago

சுந்தரவல்லி கேட்ட கேள்வி,சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…

23 hours ago

உடல் நலக்குறைவால் நடிகர் ரோபோ சங்கர் காலமானார்..!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…

23 hours ago