Rashmika Mandanna
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் ராஷ்மிகா. கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருக்க வேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும். நமது திறமையை பார்த்துத்தான் இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். எனக்கு கோபம் அதிகம் வரும். அதை வெளிப்படுத்தமாட்டேன்.
இவ்வளவு சிறிய வயதிலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்து இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அதிக சம்பளம் கேட்பதாக சொல்கிறார்கள். நடிப்பும் ஒரு வேலைதான். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு தடவை சம்பளம் வாங்கினால் அடுத்து சம்பள உயர்வை எதிர்பார்ப்பார்கள்.
அதே மாதிரிதான் நடிகர்-நடிகைகளும் மாதம் மாதம் சம்பளம் வாங்கும் வேலையை நாங்கள் செய்யவில்லை. படம் வெற்றி பெறுவதை வைத்துதான் எங்கள் எதிர்காலம் அமையும். வெற்றி பெற்றால்தான் என்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். தகுதிக்கு ஏற்ற மாதிரி சம்பளம் கேட்பது பேராசை இல்லை. சினிமாவுக்கு ஏன் வந்தோம் என்று நினைத்தது இல்லை.”
இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…