Mani Ratnam
பல வெற்றி படங்களை இயக்கியவர் மணிரத்னம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு இல்லாததால் மணிரத்னம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாற்றினார்.
இவருடன் பேசுவதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் சிலரும் ஆன்லைனில் வரிசை கட்டி நின்றார்கள்.
அப்போது பிரபல இளம் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் இவர்கள் உரையாடலை கவனித்துள்ளார். அவர் இருப்பதை கவனித்த சுஹாசினி, லிஜோவை வரவேற்று தானும் தனது கணவரும் அவரது படங்களுக்கு தீவிர ரசிகர்கள் என கூறினார்.
லிஜோவுடன் தொடர்ந்து உரையாடிய மணிரத்னம், அவர் இயக்கிய அனைத்து படங்களையும் தான் பார்த்துவிட்டதாக கூறி, மலையாள திரையுலகில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான லிஜோ தொடர்ந்து இதேபோன்ற நல்ல படைப்புகளை தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என சிறந்த படங்களை தந்து ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் லிஜோ ஜோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…
திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு ஊடகங்களிலும்…
இயக்குநர் ஆதிரன் நாக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘தி ஒன் வித்தின் யூ’. கோயம்புத்தூரின்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே…
சின்னத்திரையில் காமெடியன், நடனக் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத் திறமையுடன் ரசிகர்களை கவர்ந்து, தற்போது நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா…